கால இடைவெளியின் மௌன முடுச்சுகளை சூல்கொள்ளச் செய்து தொடர்வனசொற்கள்
...

துவாரகை தலைவன் சென்னையில் வசிக்கும் கவிஞர்.பொறியாளராகிய இவரின் சொந்த ஊர் மதுரை.கடந்த பன்னிரண்டு வருடங்களாக எழுதி வரும் இவர் இளம் தலைமுறை கவிஞர்களுள் தனித்துவம்மிக்க ஆழ்ந்த சிந்தனைக் கவிஞராக அறியப்பட்டுள்ளார். இவருடைய படைப்புகள் முன்னணி இலக்கியப் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது வரை எட்டு நூல்கள் வெளியாகியுள்ளன.இவருடைய நேரடி ஆங்கிலக் கவிதைகளும், கட்டுரைகளும் இந்தியாவின் முன்னணி இலக்கிய இணையதள இதழான மியூஸ் இண்டியா [Muse India] வில் தொடர்ந்து வெளி வந்து வாசகர்களைக் கவர்ந்துள்ளன.கவிதைகள் பற்றிய இவரது பிரத்தியேக தொலைக் காட்சி நேர்காணல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
நூல்கள்
கவிதை
1. பீங்கானிழையருவி [ஜூலை 2007]
2. உள்வெளிப் பறவை [ஏப்ரல் 2011]
3. மிதக்கும் பாதைகள் [ஜனவரி 2012]
4. தோல்பாவை [2014]
கட்டுரை
1. எழுதிச் செல்லும் நிகழ் கணங்கள் [ஏப்ரல் 2011]
2. அன்பு- சிவம்- அறிவுலக அர்த்தங்கள் [ஜனவரி 2012]
3. தோள் மேல் படகு[2014]
வரலாறு
1. இந்தியா - பாகிஸ்தான் போர்கள் [2016]

துவாரகை தலைவனின் “பீங்கானிழையருவி” கவிதைத் தொகுதி 28-10-2007 அன்று சென்னையில் கவிஞர் இந்திரனால்[நடுவில்] வெளியிடப்பட்டு “நவீன விருட்சம்”ஆசிரியர் அழகியசிங்கரால் பெற்றுக் கொள்ளப்பட்டது.
துவாரகை தலைவனின் “பீங்கானிழையருவி” கவிதைத் தொகுதி 28-10-2007 அன்று சென்னையில் கவிஞர் இந்திரனால்[நடுவில்]வெளியிடப்பட்டு “நவீன விருட்சம்”ஆசிரியர் அழகியசிங்கரால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

03-04-2011 அன்று சென்னை இக்ஷா அரங்கில் துவாரகை தலைவனின் 'உள்வெளிப் பறவை' கவிதை நூலை
கவிஞர்பூமாஈஸ்வரமூர்த்திவெளியிட கவிஞர் க்ருஷாங்கினி
பெற்றுக் கொண்டார்.
"பீங்கானிழையருவி" கவிதைத்தொகுதி பற்றிய கருத்துப்பகிர்வுகள்:
படிமங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வந்து ஓர் நேர்த்தியிழையோடி,உள்ளத்தை அழுத்தமாகத் தொட்டு இயக்கும்,வாழ்வியலை மையமாகக் கொண்ட முற்றிலும் புதிதான நவீனக் கவிதைகள்.- கவிஞர் இந்திரன்
மிகவும் கவனமாக வார்த்தைகளை தெரிவு செய்து எழுதப்பட்ட கவிதைகள். மனித நேயத்தை அடி நாதமாகக் கொண்டு அழகியலோடு நகர்ந்து செல்லும் கவிதைகள். இது ஓர் உன்னத ஆத்மார்த்த வாசிப்பு அனுபவம் தரும் படைப்பு.- கவிஞர் ரிஷி [லதா ராமகிருஷ்ணன்]
நன்றி:
தினமணி, தினமலர்,புதுப்புனல்,கவ்யா - தமிழ், நற்றிணை
ஜெயாதொலைக்காட்சி [நூல்விமர்சனம்], ஜெயா பிளஸ் தொலைக்காட்சி,
மக்கள் தொலைக்காட்சி [சிறப்புப்பேட்டி], கலைஞர் தொலைக்காட்சி [சிறப்புப்பேட்டி],
திண்ணை.காம், எனி இந்தியன்.காம்
தொடர்பு கொள்ள...
தமிழ் இளந்திரை இணையதளம்
http://www.tamilellanthirai.yolasite.com/
Literary cues-Web site
http://literarycues.yolasite.com/
வலைப்பூக்கள் [ குறிப்பு: வலைப்பூக்களுக்கு செல்லுங்கள் படைப்புகள் பற்றி
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்]
http://dwarakaithalaivan.blogspot.com/
http://dwarakaithalaivan-krishna.blogspot.com/
உங்கள் கருத்துகளை மின் அஞ்சல் செய்யுங்கள்.

